×

எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு புதிய மேலாண்மை இயக்குநர் பொறுப்பேற்பு

சென்னை: எண்ணூர் காமராஜர் துறைமுகத்தின் புதிய மேலாண்மை இயக்குநராக ஜே.பி.ஐரீன் சிந்தியா பொறுப்பேற்றார். எண்ணூர் காமராஜர் துறைமுகம் மினி ரத்னா அந்தஸ்து பெற்றது. இந்த துறைமுகத்தின் ஒன்றிய அரசின் பங்குகளை முழுமையாக வாங்கியதையடுத்து காமராஜர் துறைமுகத்தை சென்னை துறைமுகம் முழுமையாக கையகப்படுத்தியது. இதையடுத்து சுனில் பாலிவால் சென்னை துறைமுகம் மற்றும் காமராஜர் துறைமுகங்களின் தலைவராக உள்ளார்.

இந்நிலையில், காமராஜர் துறைமுகத்தின் புதிய மேலாண்மை இயக்குநராக ஜே.பி.ஐரீன் சிந்தியா நியமிக்கப்பட்டார். அவர் நேற்று முன்தினம் முறைப்படி பொறுப்பேற்றார். தமிழகத்தைச் சேர்ந்த ஐரீன் சிந்தியாவுக்கு 2008ம் ஆண்டு மத்திய பிரதேசத்தில் ஐஏஎஸ் அதிகாரியாக பணியாற்றி வந்தார். சென்னை பல்கலைக்கழகத்தில் நிர்வாகவியலில் முதுநிலை பட்டம் பெற்றவர் சிந்தியா.

The post எண்ணூர் காமராஜர் துறைமுகத்திற்கு புதிய மேலாண்மை இயக்குநர் பொறுப்பேற்பு appeared first on Dinakaran.

Tags : Ennore Kamaraj Port ,CHENNAI ,JP Irene Scindia ,Ennore Kamarajar Port ,Dinakaran ,
× RELATED செல்லப்பிராணிகள் வளர்ப்போர்...